Description
இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தங்களது தத்துவங்கள். கொள்கைகள், நடைமுறை களிலிருந்து மெல்ல விலகி பூர்சுவா கட்சிகளாக மாறி வருவதைக் கவனித்துவரும் வேளையில், சிங்கூர் பிரச்சனையில் மார்க்சிஸ்டுகள் பின்பற்றிய நடைமுறைகள் அக்கட்சி ஒரு பூர்சுவா கட்சி யாகவே முழுமையுற்று நின்றதைக் காணமுடிந்தது. தொழில் வளர்ச்சி என்ற மான் தோல் போர்த்தி முதலாளித்துவப் புலியை உள்ளே கொண்டுவர முயன்றது. விவசாயிகளை வஞ்சித்தது; எதிர்ப்பு களை ஆயுதம் கொண்டு ஒடுக்கியது. அறிவுஜீவி களும் கலைஞர்களும் கண்டிக்கும் வகையில் அதன் செயல்பாடுகள் இருந்தன. இந்தத் தலைகீழ் மாற்றத்தைக் கண்டு பலரும் அதிர்ந்தனர் கம்யூனி ஸத்தின் மீதான நம்பிக்கை இன்னும் வடிந்தது.
அதேபோல சற்று நம்பிக்கைத் தருவதாக இருந்த என் சமூகம் சார்ந்த ஒரு சுட்சி, நெருங்கிச் சென்று பார்த்தபோது, அது அதிகாரத்தின் சீழ்வடியும். புண்களை அலங்காரமாகச் சூடி நின்றது. அது அறிவை, கலைகளை தன் அதிகாரத்தை நோக்கிய விழைவுக்குச் சாதகமாக்க முயன்றுகொண்டி ருந்தது ஒழுக்கத்தைப் போதிக்க முயன்றது இந்த முயற்சிக்கான ஆதரவாளர்களையே தன் அருகே நெருங்கி வரச் செய்தது. மற்றவர்களை எல்லை யிலேயே இனம் கண்டு திருப்பி அனுப்பிக் கொண்டிருந்தது.





Reviews
There are no reviews yet.