Description
அலைவுறுதல். பத்திநாதனின் நாவலை அதன் சாரம் சார்ந்து இந்த ஒற்றைப் புள்ளியில் குவிமையப்படுத்தலாம். இந்த அலைவுறுதல் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டுக்கான பொருண்மையான அலைவுறுதலாகவும், அகதிகள் முகாமுக்குள் அன்றாட வாழ்க்கைப் பாட்டிற்கு நடக்கும் பொருள்சார்ந்த அலைவுறுதலாகவும் மாறுபட்ட தோற்றம் கொண்டு நாவலில் விரிகிறது.
இலங்கைத் தமிழ் அகதி முகாம் குறித்த அழுத்தமான சித்திரத்தை இந்நாவல் தருகிறது. அகதியினரின் அன்றாட வாழ்க்கை, அவர்கள் அரசியல், கேளிக்கை, வழிபாட்டுப் பிரச்சினை, உறவின் ஊடாட்டங்கள், பொருளாதார நெருக்கடிகள், நினைவேக்கங்கள், நடமாட்டம் சார்ந்த சிக்கல்கள், சில்லறைத்தனங்கள், அத்துமீறல்கள், இந்திய அதிகாரவர்க்கத்தின் கனிவற்ற போக்கு எனப் பல்வேறு கூறுகளை இந்நாவல் விவரிக்கிறது.


Reviews
There are no reviews yet.