Description
என்னோடிருக்கலாமே என்று துவங்கிய கோரிக்கைகள் என்னையும் கொஞ்சம் நினைத்துகொள்ளலாமே என்று இறைஞ்சுதலாக எஞ்சுவதற்குத்தான் இத்தனை மயக்கங்களா? வீட்டில் காலிங் பெல்லை அடித்துவிட்டு ஓடிவந்துவிடும் சிறுவர்களைப்போல நம் இருப்பை ஒருவருக்கு நினைவூட்டிவிடத்தான் எத்தனை பிரயத்தனங்கள். அப்புறம் அந்த அற்புதம் எப்பொதாவது ஒரு முறை சற்றே நிகழ்கிறது. அதன் முலம் நீங்கள் ஓரடிகூட முன்னேறிச் செல்ல முடியாது . ‘என்னை நினைத்துக் கொண்டதற்கு நன்றி’ என்பதற்க்கு மேல் அங்கே எதற்கும் அனுமதியில்லை என்கிறார் மனுஷ்ய புத்திரன்.




Reviews
There are no reviews yet.