Description
நாடு என்பது மக்களின் தொகுப்பு; அது நிலங்களின் தொகுப்பு அல்ல. சமூகத்தின் மீது உண்மையான அக்கறை கொண்ட ஒருவர் முதலும் இறுதியுமாய் மக்களுக்குத்தான் விசுவாசமாக இருக்க வேண்டும்! சமகாலத்தின் முக்கியமான ஊடகவியலாளர்களில் ஒருவரான சமஸ், 04.12.1979-ல் மன்னார்குடியில் பிறந்தவர். ‘தினமணி’, ‘விகடன்’ ஆசிரியர் குழுக்களில் பணியாற்றியவர். நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க ‘தி இந்து’ குழுமம் தமிழில் நாளிதழ் தொடங்க முடிவெடுத்தபோது, அதன் உருவாக்க அணியாகத் தேர்ந்தெடுத்த ஐவரில் ஒருவர். ‘தி இந்து’ தமிழ் நாளிதழின் நடுப்பக்க ஆசிரியர். சமகாலப் பிரச்சினைகளை வரலாற்றுப் பின்புலத்துடன் அணுகும் சமஸின் கட்டுரைகள் பொதுப் புத்தியை உடைப்பவை. மாற்றங்களைக் கோருபவை! சமஸின் ஏனைய நூல்கள்: ‘சாப்பாட்டுப் புராணம்’, “யாருடைய எலிகள் நாம்?’, ‘கடல்’





Reviews
There are no reviews yet.