Description
சுரமண்டலி என்ற ஒரு அற்புதமான இசைக்கருவி. யாழைப்போன்ற கருவி. வைத்தீஸ்வரன் கோவிலில் தேவாரம் இசைக்கும்போது அக்கருவியை இசைப்பார்கள். இன்று அக்கோவிலில் உள்ள ஒருவருக்கும் அக்கருவியைப் பற்றித் தெரியவில்லை. தமிழகம் முழுவதும் பல நாட்கள் தேடியலைந்தும் அக்கருவியைக் கண்டறிய முடியவில்லை. அண்மையில் காஞ்சி சங்கரமடம், வேடல் என்ற கிராமத்தில் அமைத்துள்ள அருங்காட்சியகத்தில் அக்கருவியைக் கண்டேன். ஆனால் அதை எப்படி இசைப்பது என்று கூட அங்கிருப்பவர்களுக்குத் தெரியவில்லை. வெறும் காட்சிப் பொருளாக இருக்கிறது. சில கோவில்களில் தோல் அறுந்தும், அடிப்பாகம் துருப்பிடித்தும் உன்னதமான பல இசைக்கருவிகள் வீணாகி வருகின்றன. இந்நூலில் இடம்பெற்றுள்ள பல இசைக்கருவிகள் அழிவின் விளிம்பில் இருப்பவை. ஓரிரு இடங்களில் மட்டுமே பயன்பாட்டில் இருப்பவை. கோவில்களில் இருக்கும் கருவிகளை இசைக்க அடுத்த தலைமுறைக்கு ஆட்கள் இல்லை. பெரும்பாலான கோவில்களில் எலக்ட்ரானிக் இயந்திரங்களைப் பொருந்தியிருக்கிறார்கள். சுவிட்சைப் போட்டதும் அதிலிருந்து கிளம்பும் அவஸ்தையான சந்தம் கோவிலின் சூழலையே கெடுக்கிறது. உரிய அங்கீகாரம், போதிய வருமானம் இல்லாததால் இசைக்கலைஞர்கள் செங்கல்சூளைக்கும், கல்குவாரிக்கும் வேலைக்குச் சென்றுவிட்டார்கள்.

Reviews
There are no reviews yet.