Description
தஞ்சாவூர் மாவட்டம் கீழ்வெண்மணி என்ற கிராமத்தில் மிராசுதார் விவசாயிகள் தகராரில் தலித் மக்கள் பெரும்பான்மையோர் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என ஒரு குடிசையில் அடைக்கப்பட்டு உயிருடன் கொளுத்தப்பட்டனர். இச்சம்பவம் அக்காலக் கட்டத்தில் என்னை மிகவும் உலுக்கி விட்டது. நாற்பதுக்கும் மேற்பட்ட மக்களைத் தீக்கிரையாக்குவது போன்ற வன்முறை நடக்கக் கூடுமென்று நான் எதிர்பார்க்கவேயில்லை. பிறகு அதைப்பற்றி ஒரு நாவல் எழுதுவது என்று தீர்மானித்தேன் பிரபல பத்திரிகைகளில் அக்காலச் சூழ்நிலையில் இந்நாவலைப் பிரசுரிக்க முடியாது என்று எனக்கு தெரியும். பிறகு இது “கணையாழி”யில் தொடராக வெளிவந்தது.

Reviews
There are no reviews yet.