Description
பெரியவர் வ.உ.சியை மட்டுமல்லாது தமிழின வரலாற்றின் பல்வேறு காலகட்டத்தையும் தமிழ்த்தேசிய சட்டகத்தில் வாசிக்கவும் புரிந்து கொள்ளவும் வேண்டும் என்கிற சூழலில் வ.உ.சி அவர்கள் குறித்த இந்நூல் இன்றைக்கு வளர்ந்து வரும் தமிழ்த்தேசிய அரசியலுக்கு பங்களிப்பாக அமையும், பெரியவர் வ.உ.சி. அவர்கள் மறுகண்டுபிடிப்பு செய்யப்படுகிறார் என்கிற அளவுக்கு அவரது 150 ஆம் ஆண்டு பிறந்தநாள் காலப்பகுதியில் நடக்கும் ஆய்வுகளிலும் உரையாடல்களிலும் தமிழ்த்தேசிய சிந்தனையாளர்களின் பார்வைக்கு இந்நூல் அவசியத்தேவை.
– இளஞ்சென்னியன்
வ.உ.சிதம்பரனார் தமிழ்த் தேசிய அரசியலைப் பேசவில்லை ஆனால் அவரது சிந்தனைப் புலங்கள் யாவும் தமிழ்த் தேசிய அரசியலுக்கான கருத்தியல்களே உள்ளடங்கி இருப்பதை இந்நூல் தெளிவாக அடையாளப்படுத்தி இருக்கிறது. மொழி, இலக்கியம், கலைகள், பண்பாடு, வேளாண்மை உற்பத்தி, இதர உற்பத்தி வணிகம், கல்வி, மருத்துவம், உள்ளிட்ட யாவற்றிலும் தற்சார்புப் பொருளியல் கண்ணோட்டத்தையும் அதற்கான கட்டமைப்பையும் பெருங்கனவோடு நிகழ்த்திக் காட்டிய வ.உ.சிதம்பரனாரை தமிழ்த் தேசிய அரசியசியலுக்கான அடையாளமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே இந்நூலின் பெருவேட்கையாய் இருக்கின்றது.
ஏர் மகாராசன்

Reviews
There are no reviews yet.