Description
வன்முறை குறித்து நமக்கிருக்கும் புரிதல் குறுகலானது. ஒருவரது உடலை மட்டுமே தாக்கமுடியும் என்றும் உடல் மட்டுமே வலியை உணரும் என்றும் நாம் நம்புகிறோம். தவறு. மனதைக் காயப்படுத்துவதும் வன்முறைதான். ஆயுதம் கொண்டு ஒருவரைத் தாக்குவது தீவிர வன்முறை என்றால் சொற்கள் கொண்டு நோகடிப்பது மென் வன்முறை. எனில், எந்தச் சொல் தவறானது என்பதை எப்படி உணர்வது? மென்மையாகவும்கூட ஒருவரைத் துன்புறத்தாமல் இருக்க நாம் என்ன செய்யவேண்டும், என்ன செய்யக்கூடாது? கார்குழலி இந்நூலில் தன்னுடைய அனுபவப் பகிர்வுகளின்மூலம் முன்னெடுக்கும் உரையாடல் முக்கியமானது. எங்கே தவறு என்பதைச் சுட்டிக்காட்டுவதோடு நின்றுவிடாமல் அதைச் சரி செய்வதற்கான வழிமுறைகளையும் விவாதிக்கிறார். நம் சிந்தனைகளையும் செயல்பாடுகளையும் மாற்றியமைக்கும் ஆற்றல் கொண்ட நூல்

Reviews
There are no reviews yet.