Description
நெப்போலியன் எந்த நூற்றாண்டிலோ வாழ்ந்தவர், எந்தக் கண்டத்திலோ வாழ்ந்தவர், எந்த மொழியையோ பேசியவர், அவருடைய வாழ்க்கைப் பின்னணியும் நமக்குப் பழக்கப்படாதது. ஆனாலும், அவர்மீது நமக்கு ஓர் ஈர்ப்பு இருக்கிறது, அவருடைய வரலாற்றைப் படிக்கும்போது பரவசம் வருகிறது, ‘நம்மாளுதான் இவர்’ என்று தோன்றுகிறது. அநேகமாக உலகம் முழுக்க எல்லாப் பண்பாடுகளைச் சேர்ந்தவர்களும் இப்படிதான் உணர்கிறார்கள். காரணம், வீரமும் தன்னம்பிக்கையும் நிறைந்த அவருடைய வாழ்க்கையுடன் யாரும் எளிதில் ஒன்றிவிடலாம், அவரிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம். உலகெங்கும் தன்னம்பிக்கையின் அடையாளமாகக் கருதப்படுகிற நெப்போலியனுடைய வாழ்க்கையை விறுவிறுப்பான நடையில் நூலாக்கியிருக்கிறார் என். சொக்கன். பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்பனையாகிச் சாதனை படைத்த நூல் இது.

Reviews
There are no reviews yet.