Description
எம். கோபாலகிருஷ்ணன் இந்தியில் முதுகலைப் பட்டம் பெற்றவர். ஏற்கனவே நிர்மல் வர்மா எழுதிய ‘சிவப்பு தகரக் கூரை’ நாவலையும், ராகுல் சாங்கிருத்யாயன் எழுதிய ‘வால்காவிலிருந்து கங்கை வரை’ நூலையும் இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்திருக்கிறார். ‘பாதி பழுத்த கொய்யாவைப் போல் பூமி’ என்னும் இத்தொகுப்பின் வழியே இப்போது 23 இந்திக் கவிஞர்களின் 179 கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார். இதில் கேதார்நாத் சிங், குன்வர் நாராயண், அசோக் வாஜ்பாயி, அக்ஞேயா போன்ற மூத்த கவிஞர்களுடன் கிரிராஜ் கிராது, பிரபாத் முதலிய இளங்கவிஞர்கள், தேஜி குரோவர், சுகன் கில், நிர்மலா கர்க், மோனிகா குமார், அனாமிகா, சுபம் ஸ்ரீ ஆகிய பெண் கவிஞர்களுடைய கவிதைகளும் அடங்கியுள்ளன. இந்திக் கவிதைகளின் வளர்ச்சிப் போக்கை ஆதிகாலம், பக்திகாலம், ரீதிகாலம், நவீன காலம் என நான்கு காலகட்டங்களாகப் பகுத்து, அவற்றை பற்றிய பருந்து பார்வையிலான ஒரு குறுக்குவெட்டுச் சித்திரத்தையும் மொழிபெயர்ப்பாளர் தன் முன்னுரையில் தந்திருக்கிறார். அது இக் கவிதைகளின் காலப் பின்னணியை புரிந்து கொள்ள பெரிதும் உதவுகிறது.

Reviews
There are no reviews yet.